Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் கட்சி கழுத்தை இறுக்கும் நெருக்கடி! கண் முன் நிற்கும் அதிமுக – என்ன செய்ய போகிறார் எடப்பாடி?

தமிழக அரசியல் சூழலில், தளபதி விஜய்யின் த.வெ.க. கட்சி எந்தக் கூட்டணியில் இணையப் போகிறது? என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாக உருவாகியுள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க.வுடன் இணைய வேண்டும் என பல தரப்பில் இருந்து விஜய்க்கு அழுத்தம் வருகிறது.

அரசியலில் தனித்துவம் பெற விரும்பும் விஜய், முதலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆய்ந்திருந்தார். எனினும், விஜயின் கொள்கைகள் மற்றும் அவருடைய அரசியல் வழிமுறைகள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முரண்பாடுகளுக்குள்ளாகி, அந்த வாய்ப்பு கைமறிந்தது. இதனையடுத்து, சீமான் நேரடியாக விஜய்க்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

இந்நிலையில், அ.தி.மு.க.வுடன் த.வெ.க. கூட்டணி அமைக்க, அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் மகன் உள்ளிட்டோர் விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், விஜய் தனது கட்சியின் தலையிலேயே கூட்டணி அமைய வேண்டும் எனத் திட்டவட்டமாக கூறியதால், இந்த முயற்சி தற்காலிகமாக தடைபட்டது.

விஜய்க்கு மீண்டும் அழுத்தம்

அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும் என்ற வலுவான அழுத்தம், விஜய்யின் சுற்றியுள்ள முக்கிய பிரமுகர்கள், யூடியூபர்கள், ஆதரவாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் போன்ற பல தரப்பிலிருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால்

60 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற முடியும்

அடுத்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பதவிக்கு வாய்ப்பு அதிகரிக்கும்

இதனை அடிப்படையாக வைத்து, விஜய்யின் நெருங்கிய வட்டாரத்தினர், இப்போது தவறான முடிவு எடுத்தால், மீண்டும் எழுந்து நிற்க முடியாது என அவருக்கு பயம் காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, விஜய் தனது இறுதி திரைப்படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். அந்தப் படப்பிடிப்பு முடிந்ததும் தான், எந்தக் கூட்டணியில் இணைய வேண்டும் என்பதற்கான இறுதி முடிவை அறிவிப்பேன் என்று தன்னை சந்திக்கும் அரசியல் தலைவர்களிடம் கூறிவருகிறார். எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, விஜயின் அரசியல் பயணம் புதிய திருப்பம் எடுக்கப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அடுத்த சில வாரங்களில் அவருடைய முடிவு வெளிவரும், அது தமிழக அரசியலுக்கு ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version