Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரவு நேரத்தில் நடிகையின் வீட்டில் புகுந்து ஓட்டுனர் செய்த பலே காரியம்.! அதிர்ந்து போன பிரபல நடிகை..!!

இரவு நேரத்தில் நடிகையின் வீட்டில் புகுந்து ஓட்டுனர் செய்த பலே காரியம்.! அதிர்ந்து போன பிரபல நடிகை..!!

பிரபல நடிகை ஜெயபாரதியின் வீட்டில் 31 சவரன் நகையை திருடிய பலே திருடர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜெயபாரதி. இவர் முத்து மைக்கேல் மதன காமராஜன் மற்றும் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் நடத்து மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஜெயபாரதி வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடிகையின் வீட்டில் வேலை பார்த்தவர்களை காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் வீட்டு வேலை ஆட்களின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜெயபாரதியில் வீட்டில் பணிபுரியும் கார் டிரைவர் இப்ராஹிம் மற்றும் , செக்யூரிட்டியாக வேலை பார்த்த நேபாளத்தை சேர்ந்த ஹர்க்கபகதூர் என்பவரும் நடிகையின் வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு தங்க நகைகளை சிறிது சிறிதாக கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதனையடுத்து கார் டிரைவரையும், காவலாளியையும் போலீசார் கைது செய்தனர்.

கார் ஓட்டுனரை நம்பி வீட்டுக்குள் விட்டதால் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவு நேரங்களில் பலநாட்கள் இந்த திருட்டு குறித்து பிளான் செய்ததாகவும் விசாரணையில் கூறப்பட்டது.

Exit mobile version