Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரசிகர்களின் விமர்சனத்திற்கு கூலாக பதில் தெரிவித்த நடிகை ரைசா!

உடை அணியும் விஷயத்தில் மற்றவர்கள் தொடர்பாக எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை என்று நடிகை ரைசா தெரிவித்திருக்கிறார்.

பிக்பாஸ் மூலமாக புகழ் வாய்ந்தவர் நடிகை ரைசா. வேலையில்லா பட்டதாரி, பியார் பிரேமா காதல், போன்ற சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் அண்மையில் முகப்பொலிவு சிகிச்சை எடுப்பதற்காக சென்றிருந்தார் ரைசா. அந்த சமயத்தில் மருத்துவர் பைரவி என்பவர் தவறான சிகிச்சை அளித்ததாக தெரிவித்து முகம் வீங்கிய நிலையில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார் ரைசா.

இதனைத்தொடர்ந்து வெகுநாட்களுக்கு சமூக வலைத்தளம் பக்கமே வராத ரைசா, சென்ற சில நாட்களுக்கு முன்னர் உள்ளாடை அணியாமல் சட்டை பட்டன்களை திறந்து விட்டபடி புகைப்படங்கள் ஒரு சிலவற்றை போஸ்ட் செய்திருந்தார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக தொடங்கியது இதனை கவனித்த ரசிகர்கள் கலாச்சாரத்திற்கு எதிராக இது போன்ற புகைப்படங்கள் சமுதாயத்திற்கே கேடு என்று கமெண்ட் செய்திருந்தார்கள்.

இதன் காரணமாக டென்ஷன் ஆன நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். அதில் உடை அணியும் விஷயத்தில் நீங்கள் வெறுப்புடன் இருந்தால் உங்கள் எதிர்மறை எண்ணங்கள் காரணமாக, நான் துவண்டு விட மாட்டேன். இதே எண்ணங்களுடன் வாழ்ந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ இயலாது. எதிர்மறை எண்ணங்கள் வாழ்க்கையில் அதே சிந்தனையுடன் எடுத்துச்செல்லும் பொதுவாக இதுபோன்ற கமெண்டுகளை நான் படிப்பதில்லை. இருந்தாலும் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து சென்று விடுவேன் என்று கூலாக பதில் அளித்திருக்கிறார் ரைசா.

Exit mobile version