Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடேங்கப்பா.. இதில் இவ்வளவு நன்மைகளா!! சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே புரியும்!!

Adengappa.. are there so many advantages in this!! Eat and see for yourself!!

Adengappa.. are there so many advantages in this!! Eat and see for yourself!!

அடேங்கப்பா.. இதில் இவ்வளவு நன்மைகளா!! சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே புரியும்!!

பொதுவாக நாம் சமைக்கக்கூடிய ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் பூண்டை கண்டிப்பாக சேர்த்தோம் அதில் பலவிதமான மருத்துவ பயன்கள் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இந்தப் பூண்டில் ஆன்டிவைக் சக்தி அதிகமாக இருப்பதால் நம் உடம்பில் உள்ள வைரஸ் பாக்டீரியாவை நீக்கி சளி இருமல் காய்ச்சல் தொல்லையிலிருந்து விடுபட வழி வகுக்கும்.

எனவே இந்த பூண்டை பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்களைப் பற்றி பார்ப்போம். நான் பூண்டை வேக வைத்தோம் அல்லது வருத்தோம் சாப்பிடும் போது அதில் உள்ள சக்தி முழுவதுமாக அழிந்துவிடும் எனவே பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் அதில் உள்ள சக்தி அப்படியே நம் உடம்பிற்கு கிடைக்கும்.

இந்த பூண்டில் பாஸ்பரஸ் கேஸ் இருப்பதால் பூண்டில் ஏற்படக்கூடிய வாசத்திற்கு இதுதான் காரணம் இந்த வாசத்தை பிடிக்காமல் சிலர் சாப்பிடாமல் இருப்பார்கள் அப்படிப்பட்டவர்கள் இந்த பூண்டை சிறிது நேரம் அடுப்பில் சுட்டோம் அல்லது சமைத்தோ சாப்பிட்டு வரலாம்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி பூண்டுக்கு பொருந்தும். ஏனெனில் உடலில் இருக்கக்கூடிய பாக்டீரியா தொற்றுக்களை நீக்குவதற்காக பூண்டு அதிகமாக சிலர் சாப்பிடுவார்கள். இதற்காக இரண்டு அல்லது மூன்று பல் பூண்டு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாக்டீரியாவை அழிக்க நிறைய பூண்டுகளை எடுத்துக் கொண்டால் அது பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு உள்ளது. பூண்டில் எவ்வளவு சத்துக்கள் இருந்தாலும் அது நம் உடம்பில் உள்ள அனைத்து பிரச்சினையும் தீர்க்கும் என்று எண்ணிவிட முடியாது. எனவே இதை மருந்து அளவிற்கு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

பூண்டில் கெட்ட வாசம் வந்து அதனால் சில இதை சாப்பிடாமல் இருப்பார்கள். அவர்கள் பூண்டை தோல் சீவி சிறிது சிறிதாக நறுக்கி அப்படியே சிறிது நேரம் விட்டு விடவும் பிறகு அதில் உள்ள கெட்ட வாசம் போன பிறகு சாப்பிட்டு வரவும்.

இந்த பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது. வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் சில பேருக்கு அலர்ஜி மற்றும் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது எனவே காலை உணவு உண்ட பிறகு இந்த பூண்டை எடுத்துக் கொள்ளலாம்.

Exit mobile version