Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தயாராகிவிட்டார் தல அஜித்; டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்

தயாராகிவிட்டார் தல அஜித்; டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்

தல அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அவர் அடுத்ததாக நடிக்க உள்ள ’வலிமை’ என்ற திரைப்படத்தில் அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. ஆகஸ்ட் மாதமே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், செப்டம்பர் அக்டோபர் போய் தற்போது நவம்பர் வந்தும் இன்னும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு ஒரு இனிப்பான செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அஜீத் இதுவரை நடித்திராத வித்தியாசமான போலீஸ் கேரக்டரில் நடிக்க உள்ளதால், இந்த கேரக்டருக்காக தன்னை தயார் படுத்த அவர் மூன்று மாத காலம் அவகாசம் கேட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதனை தயாரிப்பாளர் போனிகபூரும் உறுதி செய்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த கேரக்டருக்காக முழுமையாக தன்னை தல அஜித் தயார்படுத்தி கொண்டதாகவும், தற்போது படப்பிடிப்பு தயார் என்று அறிவித்துள்ளார் என்றும், இதனை அடுத்து வரும் டிசம்பர் மாதம் முதல் வாரம் இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இயக்குனர் எச்.வினோத் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகி உள்ளது

எனவே அஜித்தின் மாஸ் திரைப்படமாக உருவாகவுள்ள ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெறும் என்றும், ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது

Exit mobile version