Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரை மணி நேரத்தில் சளி தொல்லை நீங்க அற்புத பாட்டி வைத்தியம்!!

#image_title

அரை மணி நேரத்தில் சளி தொல்லை நீங்க அற்புத பாட்டி வைத்தியம்!!

மழைக்காலம் வந்து விட்டாலே சளி தொல்லையும் கூடவே வந்துவிடும். அதேபோல் பருவ நிலை மாற்றத்தாலும் சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்பை சரி செய்ய மாத்திரைகளை பயன்படுத்துவதை விட சளியை விரட்டும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி பானம் தயார் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

உடலில் சளி உருவகக் காரணம்:-

*அதிக இனிப்பு உண்ணுதல்

*குளிரூட்ட பட்ட பொருட்களை உண்ணுதல்

*மழை காலங்களில் சளி பாதிப்பு ஏற்படுதல்

*குளிர்ந்த நீர் கொண்டு தலைக்கு குளித்தல்

*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்

சளி தொல்லை நீங்க வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*கற்பூரவள்ளி – 2

*கருந்துளசி – 10 முதல் 15 இலைகள்

*ஓமம் – 1 தேக்கரண்டி

*கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி

*மஞ்சள் – 2 சிட்டிகை அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். அடுத்து ஒரு உரலில் கருந்துளசி 10 முதல் 15 இலைகள் மற்றும் 2 கற்பூரவள்ளி இலைகளை போட்டு இடித்துக் கொள்ளவும்.

இதை சூடேறிக் கொண்டிருக்கும் தண்ணீரில் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். அடுத்து அதில் ஓமம் 1 தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் 1 தேக்கரண்டி கரு மிளகு எடுத்து உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். இந்த மிளகை கொதிக்கும் நீரில் போட்டு ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த பானத்தை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.

Exit mobile version