Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“அல் கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்…” அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

“அல் கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்…” அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்துள்ளார்.

காபூலில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை “நீதியை” வழங்குவதாக அவர் பாராட்டியுள்ளார்.

கடந்த வார இறுதியில் ஆப்கானிஸ்தானில் சிஐஏ நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியுள்ளனர், 2011ல் அதன் நிறுவனர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதன் பிறகு அல்கொய்தா தீவிரவாத அமைப்புக்கு இது மிகப்பெரிய அடியாகும்.

ஜவாஹிரி எகிப்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஆவார். அவரின் தலைக்கு அமெரிக்க அரசு 25 மில்லியன் டாலர்கள் நிர்ணயம் செய்திருந்தது. அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலில் இவருக்கும் பெரும் பங்குண்டு என சொல்லப்படுகிறது.

கொல்லப்பட்டவர் ஜவாஹிரி என்று அமெரிக்க உளவுத்துறை உறுதியாக நம்புகிறது. ஒரு மூத்த நிர்வாக அதிகாரி செய்தியாளர்களிடம் காபூலில் உள்ள ஒரு “பாதுகாப்பான வீட்டின்” பால்கனியில் கொல்லப்பட்டார், அந்த வீட்டில் அவர் தனது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் வசித்து வந்தார். மற்ற உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

ஆகஸ்ட் 2021 தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஜவாஹிரி தலிபான்களிடமிருந்து புகலிடம் பெற்று அங்கு குடியேறினாரா என்பது குறித்து அவரது மரணம் கேள்விகளை எழுப்புகிறது.

Exit mobile version