Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு வாரம் மட்டும் இந்த எண்ணெயை தடவுங்கள்..! முடியில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!

#image_title

ஒரு வாரம் மட்டும் இந்த எண்ணெயை தடவுங்கள்..! முடியில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!

தற்பொழுது முடி கொட்டுதல் பிரச்சனை அனைவருக்கும் ஏற்படும் பொதுவான ஒன்றாக இருக்கின்றது. இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை எண்ணெய் செய்முறையை முயற்சித்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

*சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெய்
*வெந்தயம்
*கறிவேப்பிலை
*கற்றாழை துண்டு
*பெரு நெல்லிக்காய்

எண்ணெய் தயாரிக்கும் முறை…

மிக்ஸி ஜாரில் 1 கைப்பிடி அளவு வெந்தயம், 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலை, 1 கைப்பிடி அளவு விதை நீக்கிய பெரு நெல்லிக்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் கற்றாழை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அதில் 1 லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர் அரைத்து வைத்துள்ள கலவையை அதில் சேர்த்து கலந்து விடவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள கற்றாழை துண்டுகளை அதில் சேர்த்து காய்ச்சி நிறம் மாறியதும் அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெயை ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து கொள்ளவும். தினமும் இந்த எண்ணெயை தலைமுடிகளுக்கு உபயோகித்து வருவதினால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

Exit mobile version