Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புரோட்டா அதிகளவு சாப்பிடுபவர்களா நீங்கள்!!! மைதா சார்ந்த உணவுகளை ஏன் தவிர்க்க வேண்டும்!!!

புரோட்டா அதிகளவு சாப்பிடுபவர்களா நீங்கள்!!! மைதா சார்ந்த உணவுகளை ஏன் தவிர்க்க வேண்டும்!!!

மைதா மாவில் செய்யப்படும் உணவு வகைகளை ஏன் தவிர்க்க வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நாம் விரும்பி உண்ணும் உணவுகளில் புரோட்டா முதலிடத்தில் உள்ளது. புரோட்டா மைதா மாவில் செய்யப்படும் உணவு பொருள் ஆகும். புரோட்டா மூன்று மட்டும் சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடும். மேலும் மெதுவாக ஜீரணமாகும். இதனால் புரோட்டா அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

என்னதான் புரோட்டா அதிகம் நபர்களால் விரும்பி சாப்பிடும் உணவாக இருந்தாலும் இது மைதாவில் தயார் செய்யப்படுகின்றது. மைதாவில் செய்யப்படும் உணவுகளை அளவுக்கு அதிகமாக நாம் சாப்பிடக்கூடாது. மைதா மாவினால் இனிப்பு பண்டங்களும் தயார்.செய்யப்படுகிறது. அது ஏன் என்று இந்தஸபதிவில் தெரிந்து கொள்வோம்.

மைதா மாவால் தயாரித்த உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்…

* மைதா மாவில் தயார் செய்யப்படும் உணவு வகைகளில் அதிக அளவு கிளைசெமிக் இண்டெஸ் உள்ளது.

* மைதா மாவினால் தயார் செய்யும் உணவு பொருள்களை சாப்பிடும் பொழுது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிக வேகமா அதிகரித்து விடுகின்றது.

* மைதா மாவினால் தயார் செய்யும் உணவு பொருள்களை சாப்பிடும் பொழுது சர்க்கரை நோயினை ஏற்படுத்துகின்றது.

* மைதா மாவினால் தயார் செய்யப்படும் உணவுப் பொருள்களை சாப்பிடும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.

* மைதா மாவினால் தயார் செய்யப்படும் உணவுப் பொருள்களை சாப்பிடும் பொழுது நம் உடலில் கொழுப்பு அதிகரிக்கின்றது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கும்.

* மைதா மாவினால் தயார் செய்யப்படும் உணவு பொருளை உண்ணும் பொழுது இரதயம் சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்துகின்றது.

* மைதா மாவினால் தயார் செய்யப்படும் உணவு பொருள்களை தொடர்ந்து சாப்பிடும் பொழுது இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

* மைதா மாவினால் தயார் செய்யப்படும் உணவுகளை உண்ணும் பொழுது ஜீரணம் ஆக காலம் எடுக்கும்.

* மைதா மாவினால் தயார் செய்யப்படும் உணவுகளை உண்ணும் பொழுது செரிமானக் கோளாறு ஏற்படும்.

* மைதா மாவினால் தயார் செய்யும் உணவுப் பொருள்களை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு பெப்டிக் அல்சர் ஏற்படும்.

Exit mobile version