Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களுக்கு உடல் எடை கூடிக் கொண்டே போகிறதா? அப்போ இதை 1 கிளாஸ் பருகுங்கினால் 100% பலன் கிடைக்கும்!!

#image_title

உங்களுக்கு உடல் எடை கூடிக் கொண்டே போகிறதா? அப்போ இதை 1 கிளாஸ் பருகுங்கினால் 100% பலன் கிடைக்கும்!!

இன்றைய காலத்தில் அனைவருக்கும் உடல் எடை குறைப்பு என்பது பெரும் சவாலாக இருக்கின்றது. இதனால் எளிதில் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வயது வித்தியாசமின்றி அனைவரும் பாதித்து வருகிறோம். இந்த உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதனால் உடல் சோர்வு கண்டது தான் மிச்சம் என்று வருத்தப்படுபவர்கள் ஏராளம்.

உடல் பருமன் ஏற்படக் காரணம்:-

*துரித உணவு

*உடல் உழைப்பு இல்லாமை

*அதிக கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு உண்ணுதல்

*அதிக நேரம் தூங்குதல்

*எண்ணெய்யில் பொரித்த உணவு பொருட்கள்

*போதிய உடற்பயிற்சி இல்லாமை

தேவையான பொருட்கள்:-

*சுருள் பட்டை

*தண்ணீர்

செய்முறை:-

முதலில் 50 கிராம் அளவு சுருள் பட்டை வாங்கி வெயிலில் காயவைத்து பொடி செய்து ஒரு கண்ணாடி ஜாரில் சேமித்து கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் டீ போடும் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். பிறகு அதில் 1/2 தேக்கரண்டி சுருள் பட்டை தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்து இந்த சுருள் பட்டை நீரை ஒரு டம்ளரில் வடிகட்டி குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதை செய்து பருகலாம்.

குறிப்பு:-

*இந்த சுருள் பட்டை தேநீரை குடித்த பிறகு அடுத்த 45 நிமிடத்திற்கு எந்த ஒரு உணவும் எடுத்துக்கொள்ள கூடாது.

*இரவு உணவை மாலை 6 மணிக்கு முன்னதாக உண்ண வேண்டும். பிறகு 1 மணி நேரம் கழித்து இந்த சுருள் டீயை பருக வேண்டும்.

*சுருள் பட்டை டீயில் சுவைக்காக எலுமிச்சை சாறு,சர்க்கரை,தேன் உள்ளிட்ட எதையும் சேர்க்க கூடாது.

*சமையலுக்கு பயன்படுத்தும் பட்டை வேறு, சுருள் பட்டை வேறு. இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த பட்டையில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆன்டிபயாடிக் நிறைந்துள்ளதால் தொடர்ந்து பயன்படுத்தி வருவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

Exit mobile version