Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிக அளவு டிப்ரஷனில் உள்ளீர்களா!! இந்த ஒரு ட்ரிங் போதும் உங்கள் கவலையை மறக்க!!

அதிக அளவு டிப்ரஷனில் உள்ளீர்களா!! இந்த ஒரு ட்ரிங் போதும் உங்கள் கவலையை மறக்க!!

இந்த ஒரு பானம் உங்களது உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். கெட்ட கொழுப்புகளையும் கரைக்கும். மன அழுத்தத்தை தீர்த்து உங்களை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவும். மாரடைப்பு வருவதை தடுக்கும்.

மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும். உங்களுக்கு செரிமான கோளாறுகள் ஏதேனும் இருந்தால் அது விரைவில் குணமடையும். உங்களின் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையுடையது. தலைவலிக்கும் அருமருந்தாக பயன்படும்.

ஒரு பாத்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். அந்தத் தண்ணீரில் சின்ன துண்டு லவங்கப்பட்டையை உடைத்து போட்டுக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு இஞ்சியை இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் அத்துடன் பச்ச மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி போட்டுக் கொள்ளுங்கள்.

15 புதினா இலைகளையும் சேர்க்க வேண்டும். அரை ஸ்பூன் மிளகுத்தூள் சேர்க்க வேண்டும். ஐந்து நிமிடம் கொதித்த பிறகு அத்துடன் அரை எலுமிச்சம் பழச்சாற்றை சேர்க்க வேண்டும். இனிப்பு சுவைக்காக சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு இந்த பானத்தை குடிக்கலாம். இரவு தூங்கும் முன்பும் இந்த பானத்தை குடிக்கலாம். வாரத்தில் இரண்டு முறை குடித்து வர உங்கள் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும். கர்ப்பிணி பெண்கள் இந்த பானத்தை அருந்தக்கூடாது.

ஏனென்றால் உஷ்ணத்தை அதிகரிக்கும் அதனால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த பானத்தை கொடுக்கக் கூடாது.

Exit mobile version