Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குறைந்தது நோய் தொற்று பாதிப்பு! நம்பிக்கையூட்டும் மத்திய அரசு மகிழ்ச்சியில் மக்கள்!

நாட்டில் இதுவரையில் நோய்த்தொற்று உச்சத்தில் இருந்து வந்தது ஆனால் தற்சமயம் அந்த நோய்த்தொற்று பாதிப்பானது சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. பல மாநிலங்கள் ஊரடங்கு அமல் படுத்தி கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றது. இந்த நோய் தற்போது குறைய தொடங்கி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் நோய்த் தொற்றில் பாதிப்பின் தினசரி பாதிப்பானது இரண்டாவது நாளாக ஒரு லட்சத்துக்கு கீழே குறைந்து இருக்கிறது. என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

இன்றைய தினத்தில் காலை வரை உள்ளன 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் தினசரி நோய் தொற்று பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழே குறைந்து இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அதாவது 92 ஆயிரத்து 596 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, நோய்த் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 069 ஆக இருந்து வருகிறது

இந்தியாவில் நோய்த் தொற்று சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 31 ஆயிரத்து 715 ஆக குறைந்திருக்கிறது. சென்ற 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 664 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து மீண்டு இருக்கிறார்கள். இதன் வழியாகவே நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,75,04,126ஆக அதிகரித்து இருக்கிறது.

அதேபோல சென்ற 24 மணி நேரத்தில் 2719 பேர் இந்த நோயினால் உயிரிழந்திருக்கிறார்கள் இதன் காரணமாக, மொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 53 ஆயிரத்து 528 ஆக அதிகரித்திருக்கிறது. தொடர்ச்சியாக தினசரி பாதிப்புகளை விட குணமடைவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகி வருவதாக சொல்கிறார்கள். இதன் காரணமாக, மருத்துவத் துறையினரும் பொதுமக்களும் ஆறுதல் அடைந்து இருக்கிறார்கள். ஆகவே தேசிய அளவில் குணமடைந்தவரின் சதவீதம் 94.29 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

நாட்டில் இதுவரையில் 37.2 ஒரு கோடி பேர் நோய்த்தொற்று பரிசோதனைகள் மேற் கொண் டிருக்கிறார்கள் 21புள்ளி 90 கோடி நோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன எனவும் தகவல் கிடைத்திருக்கிறது

Exit mobile version