Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல்! பழிக்கு பழி வாங்கிய உக்ரைன் ராணுவம்!!

#image_title

இரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல்! பழிக்கு பழி வாங்கிய உக்ரைன் ராணுவம்!

இரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சில நாட்களுக்கு முன்னர் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் இரஷ்யா ஏவுகனை தாக்குதல் நடித்தியதிற்கு பதிலடியாக கருதப்படுகிறது.

உக்ரைன் நாட்டின் மீது இரஷ்யா தொடர்ந்த போர் தாக்குதல் 15 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகின்றது. இந்த போரில் அமெரிக்கா உள்பட நட்பு நாடுகள் உக்ரைன் நாட்டுக்கு உதவி செய்து வருகின்றது.

நேற்று முன் தினம் மே 30ம் தேதி இரஷ்யா இராணுவம் உக்ரைன் நாட்டின் கீவ் நகரின்.மீது இரஷ்யா இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கீவ் நகரம் நிலைகுலைந்தது மட்டுமில்லாமல் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் ராணுவம் இரஷ்யா ஆக்கிரமிப்பு மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இரஷ்யா ஆக்கிரமிப்பு மாகாணமான லுகான்ஸ்க் பகுதியில் கர்பாட்டி கிராமத்தில் கோழிப்பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணையில் இரஷ்ய இராணுவ வீரர்கள் பதுங்கி இருப்பதாக உக்ரைனுக்கு தகவல் வந்ததை அடுத்து அந்த கோழிப்பண்ணையின் மீது உக்ரைன் இராணுவம் சரிமாரியாக தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து 16 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Exit mobile version