சில்லறை பட்டாசு வியாபாரிகள் கவனத்திற்கு! இது கட்டாயம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறவிப்பு!
எதிர்வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளிப்பண்டிகை கொண்டாடவிருப்பதை
முன்னிட்டு, தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகையை விபத்தில்லா பண்டிகையாக
கொண்டாடுவதற்காக தமிழக அரசு பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு சில்லறை விற்பனை செய்ய வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், நிரந்தர உரிமம் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட சார் ஆட்சியர்/வருவாய்
கோட்டாட்சியர் மூலம் தங்கள் உரிமத்தினைப் புதுப்பித்துக் கொண்டு பயன்பெறுமாறும், தற்காலிக சில்லறைசில்லறை விற்பனை செய்ய உரிமம் பெற விரும்பும் பொதுமக்கள் / வணிகர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து இ சேவை மையம் மற்றும் பொது சேவை மையம் (E – Sevai / Common Service Centre) மூலமாக 30.09.2022-க்குள் விண்ணப்பித்து தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற்று பயன்பெறுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
–