தகாத பழக்கம்!! காதல் கணவனை திருத்த முயன்ற மனைவியின் செயல் விபரீதத்தில் முடிந்த கொடுமை!!
தனது கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரை மீட்டெடுக்க போராடிய மனைவியின் செயல் இரண்டு உயிர்களையும் காவு வாங்கியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனது காதல் கணவனை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க முயன்ற மனைவியின் செயலால் விபரீதமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கச்சிப்பட்டு என்ற பகுதியில் வசித்து வருபவர் தாஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த நிகிதா என்ற இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் தாஸ் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியதால் நிம்மதி பறிபோனது.
இதனால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான தனது காதல் கணவனை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து திருத்த நினைத்த நிகிதா அதற்காக திட்டம் ஒன்றை யோசித்து அதை செயல்படுத்த நினைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயல்வது போல் நடித்து உள்ளார்.
அப்போது திடீரென உண்மையிலேயே நிகிதாவின் உடலில் தீ பற்ற தொடங்கியது. அவரது உடல் முழுவதும் தீ பரவியதை தொடர்ந்து அவரை கட்டிப்பிடித்து அவரது கணவன் தாஸ் காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் தீயினால் படுகாயம் அடைந்த நிகிதா கடந்த 2ஆம்தேதி உயிரிழந்தார். அதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிகிதாவின் கணவர் தாஸூம் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
எதையோ நினைத்து எதையோ செய்யப்போய் இரண்டு உயிர்கள் பறிபோனது தான் மிச்சம். கணவனை திருத்த போராடிய நிகிதா சாவிலும் தன்னை விட்டு பிரியாமல் தனது கணவரை கூடவே அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.