‘வாரிசு’ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த மாஸ் ஹீரோக்களா ? சுவாரஸ்யமான தகவல்கள் !

0
167

தமிழ் ரசிகர்கள் பலரும் பொங்கல் பண்டிகைக்கு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் விஜய்யின் ‘வாரிசு’ படம் தான். அதிலும் இந்த முறை அஜித்தின் ‘துணிவு’ படமும், விஜய்யின் ‘வாரிசு’ படமும் ஒரே வாரத்தில் மோதிக்கொள்வதால் ரசிகர்கள் மத்தியில் இரண்டு படங்களுக்கும் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு பெருகி வருகிறது. ஏற்கனவே இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் போர்க்களத்தை தொடங்கியிருக்கும் நிலையில் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு பேசிய விஷயம் எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போன்று ஆகிவிட்டது. தமிழகத்தில் அஜித்தை விட சிறந்த பிரபலமான நடிகர் விஜய் தான் அதனால் அவருக்கு நிறைய திரையரங்குகள் ஒதுக்க வேண்டுமென்று உதயநிதியிடம் கோரிக்கை வைக்கப்போவதாக தில் ராஜு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தற்போது வாரிசு படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமீபத்திய பேட்டியொன்றில் பேசிய தில் ராஜு கூறுகையில், தான் முதலில் இந்த படத்தில் மகேஷ் பாபு அல்லது ராம் சரணை தான் நடிக்கவைக்க விரும்பியதாகவும் அது நடக்காமல் போனதால் விஜயை நடிக்கவைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், முதலில் மகேஷ் பாபுவிடம் அணுகினோம் ஆனால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது, பின்னர் அல்லு அர்ஜுன், ராம் சரண் மற்றும் பிரபாஸ் ஆகியோரிடம் பேசினோம். அவர்களாலும் நடிக்க முடியாமல் போனது, அதன் பின்னர் தான் இறுதியாக இந்த படத்தில் விஜயை ஒப்பந்தம் செய்தோம் என்று பேசியுள்ளார்.

வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் ஜனவரி 12ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ, ஜெயசுதா, சம்யுக்தா, சங்கீதா, ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு போன்ற பலர் நடித்துள்ளனர்.