Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வங்காள தேசத்தில் வெடித்தது மத கலவரம்!! சிறுபான்மையினர் பிரச்சனையில் இந்தியா இரட்டை வேடம்!!

Bengal government accuses India of playing a double role in the minority issue

Bengal government accuses India of playing a double role in the minority issue

Bengal: சிறுபான்மையினர் பிரச்சனையில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது வங்காள அரசு குற்றச்சாட்டு.

இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசத்தில் 2022 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்தம் 165.15 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். அதில் இந்துக்கள்  சுமார் 13.1 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். அதாவது வங்கதேச  மொத்த மக்கள் தொகையில் 7.95 சதவீதம் இந்துக்கள் ஆகும்.

இங்கு இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். இந்த நிலையில் இடஒதுக்கீட்டுக்கு தொடர்பான போராட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் இந்துக்கள் மதத்தினர்களுக்கு இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவர் சினமாய் கிறிஷ்ண தாஸ்  கைது செய்யப்பட்டார். இதனால் வங்கதேச தலைநகர் டாக்கா மற்றும் துறைமுக  சட்டோகிராம் முதலிய நகரங்களில் வன்முறை விடுத்து உள்ளது. இதில் ஒரு வழக்கறிஞர் கொல்லப்பட்ட இருக்கிறார்.

பல காயம் அடைந்து இருக்கிறார்கள். இந்த அசாதாரண நிலை காரணமாக வங்கதேசத்தில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி தலைவராக முகமது யூனுஷ் செயல்பட்டு வரும் இவர் வெளியிட்ட அறிக்கையில் வன்முறை வெடித்ததற்கு இஸ்கான அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மாய் கிருஷ்ண தான் காரணம் என தெரிவித்து இருந்தார்.

இதனை எதிர்க்கும் விதமாக பாஜக அரசு வங்கதேசத்தில் சிறுபான்மையினர் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கள அரசு அளித்த பதிலில் அரசு அக்டோபர் மாதம் நடந்த பேரணியில் நாட்டின் தேசிய கோடி மீது காவி கொடி ஏற்றி இருக்கிறார்  சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது நடவடிக்கையே வன்முறைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் பாஜக வங்காள தேச சிறுபான்மையினர் மீது இரட்டை வேடம் நடத்துகிறது என்று தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்தியாவில் உள்ள முஸ்லிம் உட்பட பிற  சிறுபான்மையினர் பிரச்சனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது என குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது.

Exit mobile version