Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக “வசம்பு + நெல்லி”.. இப்படி பயன்படுத்துங்கள்..!

#image_title

மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக “வசம்பு + நெல்லி”.. இப்படி பயன்படுத்துங்கள்..!

உடல் உறுப்புகள் செயல்பட இரத்த ஓட்டம் சீரக இயங்க வேண்டும். அதுவும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக இருப்பது மிகவும் முக்கியம் ஆகும்.

மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் இரத்த கசிவு, இரத்த குழாய் அடைப்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான பல நோய்களை காண நேரிடும்.

இந்த பாதிப்புகளை சிகிச்சை இன்றி குணமாக்கி கொள்ளும் இயற்கை வைத்திய குறிப்பு கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்…

*வசம்பு பொடி
*நெல்லிக்காய் பொடி
*வல்லாரை பொடி
*மஞ்சள் தூள்
*வெள்ளருகு பொடி

செய்முறை…

பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். இதை ஒரு டம்ளருக்கு ஊற்றி 1/4 ஸ்பூன் வசம்பு பொடி சேர்க்கவும். வசம்பு பொடி பயன்படுத்துவதற்கு முன்னர் அதை லேசாக வறுத்துக் கொள்வது நல்லது.

வம்பிற்கு அடுத்து சேர்க்க வேண்டிய பொருள் நெல்லிக்காய் பொடி. இதை 1/4 ஸ்பூன் அளவு சேர்க்கவும். அதேபோல் வல்லாரை பொடி, வெள்ளருகு பொடி 1/4 ஸ்பூன் அளவு சேர்த்து கலந்து விடவும்.

இறுதியாக சிட்டிகை அளவு மஞ்சள் கலந்து சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக குடிக்க வேண்டும்.

இந்த பானத்தை காலை உணவிற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னர் குடிக்க வேண்டும். அதேபோல் இரவு உணவிற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னர் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் ஒரு மாதத்தில் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

Exit mobile version