Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓட்டலில் உணவு சாப்பிட சம்பளம் வழங்கும் நிறுவனம்!

ஓட்டலில் உணவு சாப்பிட சம்பளம் வழங்கும் நிறுவனம்!

தற்போதைய விலைவாசி ஏற்றத்தில் ஓட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு பில்லை பார்த்தால் பகிரென இருக்கும். அந்த அளவுக்கு ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை ஏறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு உணவகம் உணவை சாப்பிடுவதற்கு சம்பளம் தருகிறது என்ற ஆச்சரியமான செய்தி வெளிவந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டபோடில் என்ற உணவகம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சுவைமிகுந்த உணவை வழங்க வேண்டும் என்பதற்காக உணவை சுவை பார்த்து அதில் உள்ள குற்றம் குறைகளை கண்டுபிடித்து சொல்வதற்காகவே சில ஊழியர்களை நியமிக்க உள்ளது. இந்த ஊழியர்களுக்கு 129 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் ஒன்பது ஆயிரம் சம்பளம் வழங்கவும் முடிவு செய்துள்ளது.

இந்த பணிக்காக நியமிக்கப்படும் பணியாளர்களை ஓட்டலில் தயாராகும் டீ, காபி, நொறுக்குத்தீனிகள் உள்பட ஒவ்வொரு உணவையும் சுவைத்து அதன் நிறை குறைகளை அறிந்து, அதன் பின் அந்த உணவின் தரத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மேலும் இந்த ஊழியர்களுக்கு ஒன்பது ஆயிரம் ரூபாய் சம்பளம் மட்டுமின்றி தங்குமிடமும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தங்களது உணவகங்களில் தயாராகும் உணவகங்கள் தயாராகும் உணவுகள் அனைத்தும் எந்தவித குறையும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் செல்லும் என்பதும் இங்கிலாந்து நாட்டிலேயே சிறந்த உணவகம் என்ற பெயரை எடுக்க இந்த ஊழியர்கள் உதவுவார்கள் என்றும் இந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஓட்டலில் உணவை சாப்பிடுவதற்கு சம்பளம் தருவது மட்டுமின்றி தங்கும் இடமும் இலவசமாக கொடுக்கும் இந்நிறுவனத்தில் வேலையில் சேர பலர் போட்டி போட்டு வருகின்றனர் என்பதும் இந்த ஓட்டலில் வேலைக்கு சேர்பவர்கள் குறித்த அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஓட்டலின் நிர்வாகம் அறிவிக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version