Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

லாரி மீது மோதிய தனியார் பேருந்து:! சம்பவ இடத்திலே 2 பேர் பலி!! 5 பேர் கவலைக்கிடம்!!

லாரி மீது மோதிய தனியார் பேருந்து:! சம்பவ இடத்திலே 2 பேர் பலி!! 5 பேர் கவலைக்கிடம்!!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியிலிருந்து குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்து லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலி!

மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சுற்றுலா பேருந்து,ஒத்தக்கடை அருகே நெடுஞ்சாலியிலுள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரியின் மீது மோதியது.

பேருந்து மோதிய வேகத்தில் ஓட்டுநர் மற்றும் பயணி சௌந்தர் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.மேலும் 5 பேர் படுகாயத்துடன் பக்கத்தில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதனால்,பெரிய அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.இந்த சுற்றுலாப் பேரில் 18 பேர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.இந்த விபத்து குறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version