லோடு ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து! 17 பேர் உடல் நசுங்கி பலி!

0
143
UP Accident

உத்தரப்பிரதேசத்தில் லோடு ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சச்சென்டி பகுதியில் லக்னோவில் இருந்து டெல்லி நோக்கி பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த லோடு ஆட்டோ மீது மோதிய பேருந்து, பாலத்தில் விழுந்து நொறுங்கியது.

இதில், பேருந்தில் பயணம் செய்த 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யுமாறும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.