Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்ன நடந்தாலும் கை மேல் பணம்!! விவசாயிகளை காக்க அரசு எடுத்த அதிரடி முடிவு!!

Cash on hand no matter what happens!! Action taken by the government to protect the farmers!!

Cash on hand no matter what happens!! Action taken by the government to protect the farmers!!

விவசாயத்தைப் பொறுத்தவரையில் பயிர்களுக்கு எப்பொழுது சேதம் ஏற்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. காலநிலை மாற்றங்களால் கூட விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகள் இருந்து அவர்களை காக்க மத்திய அரசு கிஷான் கிரடிட் கார்டுகளை அறிமுகம் செய்திருக்கிறது.

பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட்ட பட்ஜெட் தாக்கலில் கூட கிசான் கிரெடிட் கார்டுகளின் கடன் வரம்பானது 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த கடன் வரம்பு உயர்த்தப்பட்டதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வெளியிட்டார். இந்த கிஷான் கிரெடிட் கார்டை எவ்வாறு பெறுதல் என்பதை இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

தகுதியுடையவர்கள் :-

✓ விவசாயிகள்
✓ கூட்டு விவசாயிகள்
✓ குத்தகை விவசாயிகள்

மேலே குறிப்பிட்ட விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் 5000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை பயன்பரலாம் என்றும் இதற்கு தகுதியான வயது வரம்பு 18 முதல் 70 வயது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கிசான் கிரெடிட் கார்டு :-

✓ பயிர்களை பயிரிடுவதற்கு
✓ அறுவடைக்குப் பின் சந்தைப்படுத்துதல் போன்ற செலவுகளுக்கு
✓ சந்தை படுத்த தேவையான பணம்
✓ விவசாய நிலங்களின் பராமரிப்பு பணிக்கு
✓ விவசாயம் சார்ந்த முதலீடுகளுக்கு

இது போன்ற காரணங்களுக்கு கிஷான் கிரெடிட் கார்டு மூலம் கடன் தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. இதனை திருப்பி செலுத்துவதற்கு 5 ஆண்டுகள் வரை கால அளவு கொடுக்கப்படும் என்றும் பயிரினுடைய காலம் அல்லது சந்தைப்படுத்த தேவையான காலம் இதனை பொறுத்து இந்த காலமானது மாறுபடுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வட்டி விகிதம் 3 லட்சம் வரை 7 சதவீதம் ஆகவும் அதனைத் தாண்டும் பொழுது வேறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version