Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொத்து கொத்தாக மடியும் கால்நடைகள்! இந்தியா அமெரிக்கா டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டம்!

Cattle slaughtered in bunches! India America Doctors Consultative Meeting!

Cattle slaughtered in bunches! India America Doctors Consultative Meeting!

கொத்து கொத்தாக மடியும் கால்நடைகள்! இந்தியா அமெரிக்கா டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டம்!

ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் மருத்துவர்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் ராஜஸ்தான் குஜராத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மற்றும் பஞ்சாபில் நானூருக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கும் ஒருவித மர்ம நோய் தாக்கி வருகின்றது.

கால்நடை பராமரிப்பாளர்கள் பெரும அதிர்ச்சியில் உள்ளனர். மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.இந்நிலையில் மேற்படி மர்ம நோயை கட்டுப்படுத்த மிகப் பெரிய அளவிலான  தடுப்பூசி பணிகள் தேவை எனவும் கால்நடைகள் மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் எனவும் இந்திய வம்சாவழியை சேர்ந்த கால்நடை மருத்துவரின் அமெரிக்க சங்கத்தின் தலைவர் ரவி மரார்கா கூறினார்.

மேலும் வட அமெரிக்காவின் ராஜஸ்தான் சங்கத்தின் கால்நடை பராமரிப்பு துறை தலைவராகவும் இயங்கி வரும் ராஜஸ்தானில் நிலைமை மோசமாக இருப்பதாக கூறுகின்றனர்.  இந்த நோயை சமாளிப்பது  மற்றும் அதற்கான தடுப்பூசிகளை இந்தியாவுக்கு விரைவாக அனுப்புவதும் குறித்தும் மருத்துவ நிபுணர் குழு உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் முரார்கா தெரிவித்தார்.

Exit mobile version