Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் மூன்று நாட்களுக்கும் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

Chance of rain again for three days! Information released by Chennai Meteorological Department!

Chance of rain again for three days! Information released by Chennai Meteorological Department!

மீண்டும் மூன்று நாட்களுக்கும் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வடகிழக்கு தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுப்பெற்றது. அந்த புயலுக்கு மாண்டஸ்  என பெயர் வைக்கப்பட்டது. மாண்டஸ்  புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வந்தது மேலும் அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.

மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கடந்த ஜனவரி மாதத்தின்  முதலில் தான் மழையின் தாக்கம் குறைய தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று முதல் நாளை வரை மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வருகின்ற 11ஆம் தேதியும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் ஆகவும்  குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version