Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தயாநிதி மாறன் தேர்தல் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன், 2,33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தல் செல்லாது என வழக்குத் தொடரப்பட்ட விவரம்

அந்த தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல். ரவி, தயாநிதி மாறன் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அவர் மனுவில் கூறிய குற்றச்சாட்டுகள்:

தயாநிதி மாறன் தரப்பில் மனுதாக்கல்

தயாநிதி மாறன் தரப்பில், குற்றச்சாட்டுகளை நீக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர் எம்.எல். ரவி அளித்த குற்றச்சாட்டுகளில் யாதும் தக்க ஆதாரங்கள் இல்லை எனக் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணமும் இல்லையெனத் தெரிவித்து, தயாநிதி மாறன் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version