Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையில் பரபரப்பு!!! போண்டா சாப்பிட்ட பெண் மரணம்?

சென்னையில் பரபரப்பு!!! போண்டா சாப்பிட்ட பெண் மரணம்?

சென்னை சேர்ந்த கங்காதரன் இவர் சூளைமேட்டில் காமராஜர் நகரில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் கங்காதரனுக்கு.பத்மாவதி என்ற மனைவி உள்ளார், நேற்று தமது தாயுடன் பத்மாவதி கடையில் போண்டா வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார்.

அப்போது எதிர்பாரவிதமாக பத்மாவதியின் தொண்டையில் போண்டா சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பக்கத்துக்கு வீட்டினரின் உதவியுடன் அவசர ஆம்புலன்சில் ஏற்றி பத்மாவதியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

பத்மாவதியை சோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.போண்டா சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சூளைமேடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Exit mobile version