Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

#image_title

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த மலச்சிக்கல் பாதிப்பு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்.

மலச்சிக்கல் ஏற்பட காரணம்…

*தண்ணீர் அருந்தாமை

*மலத்தை முறையாக கழிக்காமை

*உடலில் நார்ச்சத்து குறைபாடு

*முறையற்ற தூக்கம்

தேவையான பொருட்கள்:-

*நெல்லிக்காய்

*இஞ்சி

*உப்பு

*எலுமிச்சை சாறு

செய்முறை:-

முதலில் பெரு நெல்லி 3 எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். அதன் விதைகளை மட்டும் நீக்கி விடவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள நெல்லி துண்டுகள், 1 துண்டு இஞ்சி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் சிறிதளவு உப்பு மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி பருகவும். இவ்வாறு பருகிய அடுத்த அரை மணி நேரத்தில் மலம் முழுவதும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Exit mobile version