பல்வலி மட்டுமல்ல சகல நோய்க்கும் ஒரே தீர்வு கிராம்பு!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

0
106

பல்வலி மட்டுமல்ல சகல நோய்க்கும் ஒரே தீர்வு கிராம்பு!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

நமது வீட்டில் உள்ள பல பொருட்கள் நமது உடல் நலத்தை பேணி காக்க பல வகைகளில் உதவுகிறது. அந்த வகையில் அருமருந்தாக பயன்படுவதுதான் கிராம்பு. இந்த கிராம்பு நாம் சாப்பிட்டு வர பல நோய்களிலிருந்து விடுபடலாம். இது பருவ மழை காலம் என்பதால் பலருக்கும் இருமல் குரல்வளை அலர்ஜி தொண்டை வலி ஜலதோஷம் காய்ச்சல் போன்றவை உண்டாகும். இவைகள் எல்லாம் சரி செய்ய கிராம்பு பெருமளவு உதவுகிறது.

வாய் துர்நாற்றம் உள்ளவர்களும் தினம் தோறும் இரண்டு கிராம்பு வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வரலாம். அவர் சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் போகும். கிராம்பை நாம் வாயில் போட்டு சாப்பிட்டு வர இரைப்பையில் ஏற்படும் எரிச்சல் குணமாகும். வாயு தொல்லை இருப்பவர்களுக்கும் கிராம்பு ஓர் நல்ல மருந்து. கிராம்பை எந்த அளவிற்கு எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு அதில் ஆபத்துகளும் உள்ளது. கிராம்பை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ரத்த சர்க்கரை அளவு குறைய அதிக வாய்ப்புள்ளது. அதனால் அதனை எடுக்கும் பொழுது அதிக கவனம் தேவை.