Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல்லூரி பேராசிரியை தற்கொலை! போலீஸ் தீவிர விசாரணை 

#image_title

கல்லூரி பேராசிரியை தற்கொலை! போலீஸ் தீவிர விசாரணை

சிவகங்கை அருகே பூவந்தியில் இருக்கும் மதுரை சிவகாசி நாடார் பயோனியர்  மீனாட்சி பெண்கள் கல்லூரியில் கணினி பேராசிரியையாக பணி செய்து வருபவர்.

சினேகபிரியா (வயது 36), இவர் சிவகங்கை சாஸ்திரி தெரு பர்மா காலனி பகுதியில் வசித்து வருகின்றார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சினேகபிரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, காவல்துறை சினேகபிரியா உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிறைய பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், காவல் துணை ஆய்வாளர் ஹரிஹரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version