Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மாரடைப்பால் காலமானார்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

நாகை மாவட்டத்தில் உள்ள அந்தனப்பேட்டை எனும் சிற்றூரில் பிறந்தவர் ஷாகுல்ஹமீது. நடந்து முடிந்து இடைத்தேர்தலில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சாகுல் ஹமீது அறிவிக்கப்பட்டிருந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவரது இழப்பு அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version