Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா இல்லா 5 தமிழக மாவட்டங்கள்

கொரோனா இல்லா 5 தமிழக மாவட்டங்கள்

கடந்த மார்ச் மாத இறுதியில் சென்னையில் பரவ துவங்கிய கொரோனா தொற்று, வேகமாக தமிழகம் முழுவதும் பரவியது.

தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையுடன் இனைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகிறது. தமிழகத்தில் சென்னை கொரோனா தொற்றில் முதலிடம் வகுத்து வரும் நிலையில், தமிழக மக்களுக்கு ஆறுதலான செய்தி கூறப்பட்டுள்ளது.

ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், இந்த ஐந்து மாவட்டங்கள் தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.

இந்த செய்தி மக்களுக்கு ஆறுதலாகவும் மற்ற மாவட்ட மக்களுக்கு நம்பிக்கையையும் அளித்துள்ளது.

Exit mobile version