Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு நீடிக்குமா.? -மத்திய அரசு விளக்கம்

21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு நீடிக்குமா.? -மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில்  கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய ஊரடங்கு உத்தரவு போட்டப்பட்டது. இன்று 5 வது நாள் ஊரடங்கு நாள் நடக்கிறது. இதுகுறித்து முக்கிய தகவலை அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா முக்கிய தகவலை கூறியுள்ளார்.

தேசிய ஊரடங்கு உத்தரவால் இந்திய மாநில எல்லைகள் முடக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. மேலும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெருமளவெ பாதித்துள்ளது. 21 நாட்கள் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு இன்னும் சில நாட்களுக்கு மத்திய அரசு நீட்டிக்கும் என்று சில வதந்திகள் இணையத்தில் வெளியானது. இந்த தகவல்களை கேட்கும்போது ஆச்சரியம் அளிப்பதாக ராஜிவ் கவுபா தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவை நீட்டிப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது என்றும் அவை ஆதாராப்பூர்வமாக அறிவித்த செய்தி அல்ல என்றும் கூறியுள்ளார். மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டமில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு மக்கள் அவஸ்தைபட்டு வருகின்றனர். பலர் சொந்த ஊருக்கு பல கிலோமீட்டர் நடந்தே செல்ல வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது.
இந்தியாவில் 1000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.






Exit mobile version