இந்தோனேசியாவில் அதிகரிக்கும் கொரோனா

0
97

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகள் ஆகும். அதே போல இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் கொரோனா கிருமிப்பரவல் அதிகரித்துவருவதை முன்னிட்டு மீண்டும் முடக்கநிலை நடப்புக்கு வரவிருக்கிறது. இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் அங்கு அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.