மீண்டும் ஊழல் வழக்கில் சிக்கிய திமுக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

0
169

மீண்டும் ஊழல் வழக்கில் சிக்கிய திமுக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

கடந்த கால திமுகவின் ஆட்சியில் மத்திய கூட்டுறவு வங்கியில்,100 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து மேலும் விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் உதவியுடன் பழைய குற்றச்சாட்டுகளை எல்லாம் மறைத்து மக்களவை தேர்தலில் எதிர்பார்க்காத அளவில் வெற்றியை பெற்ற திமுகவிற்கு இந்த விசாரணை பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் கடந்த கால திமுகவின் ஆட்சிக்காலத்தில் குறிப்பாக 2006-2007ஆம் ஆண்டுகளில் ஊழல் நடைபெற்றுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. மேலே குறிப்பிட்ட அந்த கூட்டுறவு வங்கியின் கிளைகளில் ஏறக்குறைய 100 கோடி ரூபாய் வரை திமுகவினர் ஊழல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மேலும் அது குறித்து தீவிர விசாரணை நடத்த சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் போரூர், திருவொற்றியூர், பல்லாவரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில், பொதுமக்களின் சேமிப்பு நிதி, நிரந்தர வைப்பு நிதி, நகைக்கடன், மகளிர் மேம்பாட்டு நிதியில் இருந்து திமுகவினர் ஊழல் செய்து தங்களது வழக்கமான கைவரிசையை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது

இந்த ஊழலால் வாடிக்கையாளர்களுக்கு வட்டிப்பணம், பங்கு லாபத்தொகை வழங்க முடியாத நிலையில் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியின் வங்கிக்கிளைகள் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளன.

திமுகவினரின் இந்த மெகா ஊழல் தொடர்பாக, சிறப்பு அதிகாரியின் தலைமையில் 6 பேர் கொண்ட குழு விசாரித்தது. அதில் 2010 ஆம் ஆண்டு, ஏப்ரல் 13 ஆம் தேதி, 333 பக்கங்கள் கொண்ட உண்மை கண்டறியும் அறிக்கையை விசாரணைக்குழு தாக்கல் செய்தது. இந்நிலையில் இவ்வழக்கில் மேலும் உண்மைகளை கண்டறிய சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளான எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது

இவ்வாறு ஏமாற்றுதல், மோசடி செய்தல், ஆவணங்களை மாற்றி அமைத்தல் போன்ற திமுகவினரின் செயல்களால் மக்களின் பணத்தை பறிகொடுத்த மத்திய கூட்டுறவு வங்கிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் வங்கிக் கணக்கில் உள்ளவர்களுக்கு வட்டித்தொகை மற்றும் லாபத்தொகை ஆகியவை செலுத்த முடியாமல் பெரும் சிக்கலில் இந்த வங்கிகள் உள்ளன.

கடந்த காலங்களில் திமுகவினர் என்ன ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்தாலும் தங்களிடம் உள்ள ஊடக பலத்தால் தேர்தல் நேரங்களில் அவற்றையெல்லாம் மறைத்து ஆளும் கட்சியினரை பற்றிய குறைகளை மட்டுமே பேசி வெற்றி பெற்று விட்டனர் என்று இது குறித்து மக்கள் விமர்சித்து வருகின்றனர்.