Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோவையில் ஈவேரா சிலை மீது காவி நிறத்தை ஊற்றிய மர்ம நபர்கள்! கருப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பா.?

கந்த சஷ்டி கவசம் குறித்து தரக்குறைவாக பேசிய கறுப்பர் என்ற இணைய பக்கத்தில் பேசிய சுரேந்தர் என்பவன் மீது பாஜகவினர் புகார் அளித்தனர். அவரை கைது செய்யுமாறு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பில் குரல் எழுந்தது. இதையடுத்து தாடி மற்றும் மீசைகளை மழித்துவிட்டு புதுச்சேரியில் சுரேந்தர் சரண்டைந்தான். தமிழக போலீசார் புதுச்சேரி சென்று அவனை வாகத்தில் அழைத்து வந்தனர்.

 

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரத்திலுள்ள ஈவேரா சிலை மீது காவி வர்ணத்தை மர்ம நபர்கள் ஊற்றியுள்ளனர். கறுப்பர் கூட்டத்துக்கு பதிலடி தரும் வகையில் எதிராக செய்யப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா தெரியவில்லை.

 

இச்சம்பவம் தொடர்பாக ஈவேரா சிலையில் காவி பெய்ண்ட் ஊற்றியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version