Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று தமிழகம் வரும் சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள்!!

#image_title

இன்று தமிழகம் வரும் சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள்!!

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக முதற்கட்டமாக ஜந்து கம்பெனி சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள் இன்று தமிழகம் வருகின்றனர்.வருகின்ற மார்ச் 7 ஆம் தேதி மேலும் பத்து கம்பெனி சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள் தமிழகம் வரவுள்ளனர்.

மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என கூறிய நிலையில் இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version