Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டெல்லி வன்முறை: ஒரு பெண் உட்பட மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

டெல்லி வன்முறை: ஒரு பெண் உட்பட மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

டெல்லி வடகிழக்கு பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும். ஆதரவாகவும் சென்ற பேரணியால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் டெல்லி மக்களிடையே பெரும் பாதிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இந்த வன்முறையில் ஒரு காலர் உட்பட 30 பேர் இறந்திருந்தனர். கலவரத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் இறந்துள்ளனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவார். இந்த சம்பவத்தில் 250 க்கும் மேற்பட்டோர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களை பற்றிய தகவலை ஜிடிபி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர்.சுனில்குமார் அவர்கள் உறுதிபடுத்தியுள்ளார்.

பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் இறப்பு தகவல் :

இந்த கலவரத்தில் இறந்த காவலர் ரத்தன் லால் அவர்களின் குடும்பத்திற்கு டெல்லி முதல்வர் 1 கோடி ரூபாய் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்கள் டெல்லி அரசுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் மெத்தனபோக்குதான் காரணம் என்று நீதிபதிகளும் கூறியுள்ளனர்.

Exit mobile version