Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மது அருந்த, சிகிரெட் பிடிக்க கூறி டார்சர் செய்த சக மருத்துவர்.. பல் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு..!

மது அருந்த சொல்லியும் காதலிக்க சொல்லியும் வற்புறுத்தியதால் பெண் பல மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவராக உத்திரபிரதேசத்தை சேர்ந்த பிரியங்ஷி திரிபாதி பணியாற்றி வந்தார். இவருடன் பணி புரிந்த சக மருத்துவர் சுமித் என்பவர் அவரை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

மேலும், அவரை புகைப்பிடிக்க சொல்லியும், மது அருந்த சொல்லியும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். தினமும் அவர் பிரியங்ஷியை அவர் தொல்லை செய்து வந்துள்ளார்.ஆனால், பிரியங்ஷி மறுத்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுமித் பெண் மருத்துவரின் நடத்தையை பற்றி தவறாக அவதூறு பரப்ப தொடங்கினார்.

இதனால், சக பணியாளர்கள் அவரை பற்றி அவதூறு பேசியதால் மன அழுத்ததிற்கு ஆளான அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version