Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தான் சாகபோவதாக மனைவிக்கு போன் செய்த கணவன்! புத்திசாலி மனைவியால் மீட்கப்பட்ட ருசிகர சம்பவம்!

ஐதராபாத்தைச் சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர் தன் மனைவிக்கு போன் செய்து தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அதிர்ச்சிகரமான தகவலை கூறி போனை துண்டித்தார். இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி “தப்பச்சாபுத்ரா’ என்பவர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக காவல்துறைக்கு போன் செய்து கணவர் பற்றிய தகவலை கூறியுள்ளார். இதன்பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது கணவரை காப்பாற்றி கைது செய்தனர். எதற்காக தற்கொலைக்கு முயற்சி செய்தீர்கள் என்று காவல்துறையினர் விசாரித்தபோது, கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளானதால் இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் வேலையிழப்பு, வருமானம் மற்றும் குடும்ப சிக்கலால் பலருக்கு மன அழுத்தம் அதிகரித்து தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர்.

Exit mobile version