சர்க்கரை நோய்? அப்போ இந்த ஒரு பானத்தை பருங்குங்கள் போதும்!!

0
82
#image_title

சர்க்கரை நோய்? அப்போ இந்த ஒரு பானத்தை பருங்குங்கள் போதும்!!

இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை வியாதி என்று சர்க்கரை நோய் உருவாகிறது. இதற்காக நாம் அதிகளவு மாத்திரைகளை உண்டு வருகிறோம். இதனால் உடல் ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படும். மாத்திரையே உணவு என்ற நிலை உருவாகி விடும். இதனால் சில இயற்கை வழிகளை பின்பற்றினாலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

அந்த வகையில் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் கருவேப்பிலை தேநீர் செய்து பருகி வருவதன் மூலம் அந்த பாதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். கறிவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து மற்றும் விட்டமின் சி, ஏ, பி, இ போன்ற சத்துகளும் நிறைந்து இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*கருவேப்பிலை – 15

*தூயத் தேன் – 1 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள 15 கருவேப்பிலை இலைகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து இந்த தேநீரை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி கொள்ளவும். அதில் 1 தேக்கரண்டி அளவு தூயத் தேன் மற்றும் 1/2 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் இதை பருகவும். இவ்வாறு தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.