Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எங்க மேல என்ன காண்டு துரைமுருகனுக்கு? மார்க்சிஸ்ட் கட்சியினர் கொந்தளிப்பு!

திருமணமாகாத திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் துரைமுருகனின் உத்தரவால் கட்சி தொண்டர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்து உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இதனை ஏற்று, தி.மு.க. நிர்வாகிகளுக்கு துரைமுருகன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த முடிவால் கட்சித் தொண்டர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக சண்முகம் குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளார். “மாநில அரசே இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். இல்லை என்றால், குறைந்தபட்சம் தமிழக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, ஒரு தீர்வை கண்டுபிடிக்கலாம். ஆனால், எந்த முன்வழியும் மேற்கொள்ளப்படவில்லை. நேரடியாக கட்சித் தொண்டர்களே கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என கூறியுள்ளனர்,” என்று அவர் விமர்சித்தார்.

இதைத் தொடர்ந்து, “12 வாரங்களுக்குள் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாவிட்டால், போலீசாரே அதை அகற்றி, அதன் செலவை கட்சியிலிருந்து வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் அரசியல் கட்சிகளை குறிவைத்து நடவடிக்கை எடுக்கிறார்களா? ஏன் இத்தகைய தீர்ப்புகள் மட்டும் கட்சிகளுக்கு எதிராக வருகின்றன?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், “நாம் 10 கொடிக்கம்பங்களை வைத்திருந்தால், அவர்களுக்கு 150 கொடிக்கம்பங்கள் உள்ளன. அரசியல் கட்சிகளுக்கு கொடியை ஏற்ற அனுமதி உண்டு. போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தால் அதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், துரைமுருகன் ஒரு தீர்வு குறித்து ஆலோசிக்காமல், கட்சி தொண்டர்களுக்கு நேரடியாக ஆணை பிறப்பித்திருக்கிறார். இது சரியான அணுகுமுறையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version