விரைவில் கடன் தீர்ந்து பணம் சேர இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

0
118
#image_title

விரைவில் கடன் தீர்ந்து பணம் சேர இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

இன்றைய உலகில் பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம்.

நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து சிறிதளவு தொகையை எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சேமித்தாலும் அவை ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடனில் சிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம். இந்த கடன் பிரச்சனை நீங்கி வீட்டில் செல்வம் செழிக்க சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவது நல்லது.

பரிகாரம் 01:

இதை ஞாயிற்றுக் கிழமை அன்று தான் செய்ய வேண்டும். ஒரு சிறிய மஞ்சள் துணி எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து 2 வெற்றிலை எடுத்துக் கொண்டு அதற்குள் 2 கொட்டைப் பாக்கு மற்றும் 1 தேக்கரண்டி கல் உப்பு வைத்துக் கொள்ளவும்.

வெற்றிலையை நன்றாக மடித்து அதை அந்த மஞ்சள் துணியில் வைத்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.

இதை ஒரு சிறிய தட்டில் வைத்து பூஜை அறையில் வைக்கவும். பின்பு விளக்கேற்றி தூப தீப வழிபாடு செய்து கடன் விரைவில் தீர வேண்டும் என்று நன்றாக வேண்டிக் கொள்ளவும்.

9 ஞாயிற்றுக் கிழமைகள் தொடர்ந்து செய்ய கடன் தீர வழி பிறக்கும். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை அன்றும் இதை மாற்றும் போது பழையதைக் கால் படாத இடத்தில் போடவும்.

பரிகாரம் 02:

தினமும் காலை வீட்டில் விளக்கு ஏற்றும் போது, இந்த மந்திரத்தை 108 முறை மனதார சொல்லவும்.

“என்னுடைய கடன்கள் விரைவில் தீர வேண்டும்.” என்று உங்கள் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வேண்டிக் கொண்டு சொல்ல ஆரம்பிக்கவும்.

மந்திரம்:

“லலிதம் ஸ்ரீதரம்

லலிதம் பாஸ்கரம்

லலிதம் ஸீதர்சனம்”

மாலை வேளைகளிலும் சொல்லி வந்தால் பலன் அதிகம் கிடைத்து விரைவில் கடன் தீர்க்க உதவும்.

இதை தொடர்ந்து 48 நாட்களுக்கு சொல்லி வந்தோம் என்றால் நல்ல பலன் கிடைக்கும். மந்திரம் சிறியது என்றாலும் பலன் மிகவும் அதிகம்.

பரிகாரம் 03:

மிகச் சிறிய மண் செம்பு(மண் பானை) வாங்கிக் கொள்ளவும். நாட்டு மருந்து கடைகளில் நவதானியம் வாங்கிக் கொள்ளவும்.

வெள்ளிக் கிழமை காலை 6-7 மணிக்குள் அந்த சிறிய மண் செம்பில் இந்த நவ தானியத்தை செம்பு நிறையும் வரை போடவும்.

பின்பு, இதை உங்கள் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் சற்று உயரமான இடத்தில் வைக்கவும்.

மாதம் ஒருமுறை இதை மாற்றி பழையதை மொட்டை மாடியில் ஒரு தட்டில் பறவைகளுக்கு உணவாக வைத்து விடவும்.

பிறகு மறுபடியும் புதிதாக நவதானியம் வாங்கி அந்த சிறிய மண் பானையில் வைக்கவும்.

தொடர்ந்து 2 மாதங்களுக்கு செய்து வர பண வரவில் முன்னேற்றம் ஏற்பட்டு கடன் தீர ஆரம்பிக்கும்.