சொத்தைப்பல் வலி அதிகமாக இருக்கிறதா? கவலையை விடுங்க உங்களுக்கான தீர்வு இதோ!

0
68
#image_title

சொத்தைப்பல் வலி அதிகமாக இருக்கிறதா? கவலையை விடுங்க உங்களுக்கான தீர்வு இதோ!

அதிகப்படியான இனிப்பு பண்டங்களை தொடர்ந்து உண்பதினால் நல்ல பற்கள் விரைவில் சொத்தையாகி விடுகிறது.அதேபோல் பற்களை முறையாக துலக்காதது போன்றவையாலும் சொத்தை பற்கள் உருவாகத் தொடங்கும்.

இதனால் பல் வலி,வாய் துர்நாற்றம்,ஈறுகளில் வீக்கம்,பல் குடைச்சல்,பல் கூச்சம் போன்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.

தினமும் காலையில் உணவு உட்கொள்வதற்கு முன் மற்றும் இரவு உணவு உட்கொண்ட பின் பல் துலக்குவது மிகவும் முக்கியமான ஒன்று.நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நல்ல பற்களை சொத்தையாக்கி கொள்கிறோம்.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீர்வு காண்பது மிகவும் முக்கியமான ஒன்று.

தேவையான பொருட்கள்:-

*கிராம்பு எண்ணெய் – 1/4 தேக்கரண்டி

*நல்லெண்ணெய் – 1/2 தேக்கரண்டி

*காட்டன் பஞ்சு – 1

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 1/4 தேக்கரண்டி கிராம்பு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் அதில் 1/2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த ரெமிடியை இரவு தூங்குவதற்கு முன் பயன்படுத்த வேண்டும்.சிறிதளவு காட்டன் பஞ்சு எடுத்து தயார் செய்து வைத்துள்ள எண்ணெய் கலவையில் நினைத்து சொத்தை பல் மேல் வைத்துக் கொண்டு தூங்கவும்.மறுநாள் இந்த வாயில் உள்ள பஞ்சை அப்புறப்படுத்தி விடவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் சொத்தைப்பல் வலி விரைவில் சரியாகி விடும்.