வாழைப்பூ சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 அசத்தல் நன்மைகள் பற்றி தெரியுமா?

0
84
#image_title

வாழைப்பூ சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 அசத்தல் நன்மைகள் பற்றி தெரியுமா?

மனித உடலுக்கு பல ஆரோக்கியங்களை அள்ளி தருவதில் வாழைக்கு அதிக பங்கு இருக்கிறது.வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் பழம்,பூ,தண்டு,இலை உள்ளிட்ட அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த அற்புத வாழைமரத்தில் உள்ள பூவின் பயன் தெரிந்தால் இனி நிச்சயம் இதை உணவில் சேர்த்து கொள்வீர்கள்.இந்த வாழைப்பூவில் அதிகளவு விட்டமின்கள்,ஃப்ளேவனாய்ட்ஸ், புரோட்டீன்,இரும்புசத்து,பொட்டாசியம், வைட்டமின் ஏ,சி,பி1 நிறைந்து இருப்பதால் இவை உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக செயல்படுகிறது.

வாழைப்பூ சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத நன்மைகள்:-

*அடிக்கடி வாழைப்பூ உணவில் சேர்த்து வந்தோம் என்றால் உடலில் செரிமான பாதிப்பு சரியாகும்.மேலும் ஜீரண சக்தி மேம்பட்டு உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற தொடங்கும்.

*வாழைப்பூவில் அதிகளவு பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் உள்ளது.இவை உடலில் இரத்த அழுத்தத்தை சீர் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.அதேபோல் கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைக்கிறது.

*வாழைப்பூவில் உப்பு சேர்த்து வேகவைத்து அதன் சாற்றை பருகினால் தீராத வயிற்று வலி பாதிப்பு சரியாகும்.

*அதேபோல் வாழைப்பூவை உணவில் சேர்த்து கொண்டோம் என்றால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல்,மாதவிடாய் வலி உள்ளிட்ட பாதிப்புகள் உடனடியாக சரியாகி விடும்.

*விந்தனு குறைபாடு இருக்கும் ஆண்கள் இந்த வாழைப்பூவை உணவில் எடுத்துக் கொள்வது நல்லது.

*மலசிக்கல் சீதபோதி,இரத்த மூலம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் இந்த வாழைப்பூ சிறந்த தீர்வாக இருக்கும்.

*இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இந்த வாழைப்பூ பெரிதும் உதவும்.

*அதேபோல் இரத்த மூலம்,உள் மூலம்,வெளி மூலம் உள்ளிட்ட மூல நோய் பாதிப்பு இருப்பவர்கள் வாழைப்பூவை உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.