Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டாய்லெட்டில் முக்கி முக்கி மலம் கழிக்க காரணம் என்ன தெரியுமா? இதை செய்தால் மலக்கழிவுகள் இளகி வந்துவிடும்!!

இன்று பெரியவர்கள்,சிறியவர் பாகுபாடின்றி அனைவருக்கும் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.கடந்த காலங்களில் குறைந்த நபர்களே இந்த மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்து வந்தனர்.ஆனால் தற்பொழுது பின்பற்றப்படும் உணவுமுறையால் பெரும்பாலனோர் மலச்சிக்கல் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

மலச்சிக்கல் ஏற்பட காரணங்கள்:

1)நார்ச்சத்து குறைவான உணவுகளை உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.குடற் வறட்சி காரணமாக மலச்சிக்கல் ஏற்படுகிறது.

2)மூலம்,உடல் சூடு போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.செரிமானப் பிரச்சனையை சந்திப்பவருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது.

3)நீர்ச்சத்து குறைபாட்டால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.

மலச்சிக்கலை குணப்படுத்தும் வீட்டு மருத்துவ முறைகள்:

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு (அ)
பழுப்பு உலர் திராட்சை – ஒரு தேக்கரண்டி

2)தண்ணீர் – 100 மில்லி

செய்முறை விளக்கம்:-

படி 01:

ஒரு கிண்ணத்தில் கருப்பு அல்லது பழுப்பு உலர் திராட்சை ஒரு தேக்கரண்டி அளவு போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவிட வேண்டும்.

படி 02:

பிறகு உலர் திராட்சையை மண்,தூசு இன்றி கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 100 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

படி 03:

பிறகு ஊறவைத்த திராட்சையை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு பானத்தை சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.

படி 04:

பிறகு இந்த உலர் திராட்சை பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர் – ஒரு கிளாஸ்
2)பனங்கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

படி 01:

நாட்டு மருந்து கடையில் பனங்கிழங்கு பொடி கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.விருப்பம் இல்லாதவர்கள் பனங்கிழங்கை அவித்து காயவைத்து பொடியாக்கி வைத்து பயன்படுத்தலாம்.

படி 02:

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

படி 03:

பிறகு அரைத்து வைத்துள்ள பனங்கிழங்கு பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கொதிக்க வைத்து பருக வேண்டும்.இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் முற்றிலும் குணமாகும்.

Exit mobile version