அபூர்வ கிரக நகர்வால் அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள் யார், யாரென்று தெரியுமா?

0
92
Do you know who and what zodiac signs will be buoyed by a rare planetary transit?

அபூர்வ கிரக நகர்வால் அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள் யார், யாரென்று தெரியுமா?

வரும் அக்டோபர் மாதம் 14ம் தேதி சூரிய கிரகணமும், 28ம் தேதி சந்திர கிரகணமும் நிகழ உள்ளது. இதனையடுத்து, நவம்பர் 4ம் தேதி சனி பகவான் கும்பத்தில் வக்ர நிவரத்தி அடைகிறார்.

மேலும், சனி பகவான், குரு பகவான் வரிசையில் ராகு கேது பெயர்ச்சி அடைகிறார். சனியின் வக்ர நிலை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பும் போது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழையில் நனைய உள்ளனர்.

அபூர்வ கிரக நகர்வால் அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள் யார், யாரென்று என்று பார்ப்போம் –

மேஷம்

அபூர்வ கிரக நகர்வால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. புதிய வேலையில் வருமானம் அதிகரிக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொழிலில் உள்ள முன்னேற்றம் அடைவீர்கள்.புதிய யோசனைகள் உங்கள் மனதில் தோன்றும்.

மிதுனம்

அபூர்வ கிரக நகர்வால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. நீண்ட நாட்களாக பிரச்சினைகளில் இருந்து வந்த நீங்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விடப்போகிறீர்கள்.படிப்பில் நல்ல வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். எந்த செயல்களையும் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

கடகம்

அபூர்வ கிரக நகர்வால், கடக ராசிக்காரர்களே உங்களுக்கு  வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் நிகழும். வணிகத்தில் சிறப்படைவீர்கள்.நிலுவையில் உள்ள முக்கிய வேலைகளை சீக்கிரம் செய்து முடிப்பீர்கள். கடமைகளை சிறப்பாக செய்வீர்கள். கொஞ்சம் உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும்.வேலையை அதிகரிக்கப்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.பெரியவர்களின் ஆலோசனைகள் கேளுங்கள். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

சிம்மம்

அபூர்வ கிரக நகர்வால், சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு 3 கிரகங்களின் முக்கிய மாற்றம் நிகழ்வதால் இது வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு பெறுவீர்கள். வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப சூழ்நிலைகள் சீராக இருக்கும்.மன நிம்மதி பெறுவீர்கள். கடின உழைப்பு வீண் போகாது.

துலாம்

அபூர்வ கிரக நகர்வால், துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கப்போகிறது. வாழ்க்கையில்  நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பத்தில் நண்பர்களின் உறவு நன்றாக மேம்படும்.நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.நிதி நிலை சீராக இருக்கும் வறுமை நீங்கும்.