Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பல நாட்களாக மாதவிடாய் தள்ளி போகிறதா? மாதவிடாயின் போது அதிகளவு வலி ஏற்படுகிறதா? இவை இரண்டிற்கும் தீர்வு இதோ!!

#image_title

பல நாட்களாக மாதவிடாய் தள்ளி போகிறதா? மாதவிடாயின் போது அதிகளவு வலி ஏற்படுகிறதா? இவை இரண்டிற்கும் தீர்வு இதோ!!

பெண்கள் பலர் சீரற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் தான் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.முறையற்ற மாதவிடாய் மற்றும் மாதவிடாயின் போது ஏற்படுகின்ற வலி குணமாக இந்த இயற்கை வைத்தியம் தங்களுக்கு கைகொடுக்கும் பெண்களே.

மாதவிடாய் முறையாக வர:

தேவையான பொருட்கள்:-

1)எள்
2)வெல்லம்

1/4 கப் கருப்பு எள்ளை வாணலியில் போட்டு வறுத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடியில் 1/4 கப் வெல்லம் சேர்த்து உருண்டை பிடித்து சாப்பிட்டால் ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும்.

மற்றொரு தீர்வு:-

1)கருஞ்சீரகம்
2)நாட்டு சர்க்கரை

1/4 ஸ்பூன் கருஞ்சீரகத்தை அரைத்து பொடியாக்கி ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு காய்ச்சவும்.பிறகு அதில் நாட்டு சர்க்கரை 3 தேக்கரண்டி சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் பல மாதங்களாக வராத மாதவிடாயும் சில நிமிடங்களில் வந்து விடும்.

மாதவிடாய் வலி குணமாக:

தேவைப்படும் பொருட்கள்:-

1)பால்
2)மஞ்சள்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் சிட்டிகை மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் மாதவிடாய் வலி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

மற்றொரு தீர்வு:-

1)பால்
2)வெந்தயம்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி வறுத்து அரைத்த வெந்தயப் பொடி சேர்த்து கொதிக்க விட்டு குடித்தால் மாதவிடாய் வலி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

Exit mobile version