மத்திய அரசு வழங்கும் ரூ.50,000 வேண்டுமா.. அப்போ இதை உடனே செய்யுங்கள்!!
நம் ஓய்வு காலத்தில் பிறரை நமபி வாழாமல் இருக்க இளம் வயதிலேயே பல திட்டங்களை வகுப்பது சிறந்ததாக இருக்கும்.ஓய்வு காலம் நெருங்கும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்தால் பின்னாளில் வேலை இல்லாத வயதான காலத்தில் பணமின்றி வாழ்க்கையை நகர்த்துவது மிகவும் கடினமான ஒன்றாகிவிடும்.எனவே இளம் வயதில் இருந்தே ஓய்வு காலத்திற்காக சேமிக்க தொடங்குங்கள்.
ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய சிறந்த திட்டமாக தேசிய ஓய்வுதிய திட்டம்(National Pension Scheme(NPS)) இருக்கிறது.இந்த திட்டத்தில் வாயிலாக முதலீட்டாளர்கள் தங்களுக்கு விருப்பமான பங்கு சந்தைகளில் முதலீடு செய்யலாம்.
தொடர் விலைவாசி உயர்வால் நம் ஓய்வு காலத்தில் குறைந்து ரூ.5,000 இருந்தால் மட்டுமே எவ்வித சிரமின்றி வாழ்க்கையை நகர்த்த முடியும்.அந்த வகையில் இளம் இளம் வயதில் இந்த திட்டத்தை தொடங்கி விட்டால் குறைந்த முதலீட்டு தொகை + அதிகப்படியான ஓய்வூதிய தொகை பெற முடியும்.
உங்களுக்கு தற்பொழுது 35 வயதாகிறது என்றால் இப்பொழுது இருந்து NPS திட்டத்தில் முதலீடு செய்தால் 25 வருடங்கள் அதாவது 60 வயதிற்கு பின்னர் 2 கோடி முதிர்வு தொகை பெற முடியும்.
NSP மாத முதலீட்டு தொகை: ரூ.15,000
25 வருட முதலீட்டு தொகை: 45 லட்சம்
25 வருடத்திற்கு பின்னர் கிடைக்கும் முதிர்வுத் தொகை: ரூ.2 கோடி
எனவே இளம் வயதிலேயே ஓய்வு காலத்திற்காக சிந்தித்து NPS போன்ற சிறந்த திட்டங்களில் முதலீடு செய்வது நல்ல முடிவாக இருக்கும்.