Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சளி இருமல் பிரச்சனை குணமாக வேண்டுமா! பூண்டு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும்!

சளி இருமல் பிரச்சனை குணமாக வேண்டுமா! பூண்டு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும்!

தீராத சளி இருமல் ஆகியவற்றை குணப்படுத்த வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம்.

உடலில் அதிகப்படியான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுவதன் காரணமாக தீராத சளி இருமல் ஏற்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி மண்டலங்கள் வலு இழப்பதன் காரணமாகவும் காய்ச்சல், இருமல், சளி இவை ஏற்படும்.

இருமல் வருவதற்கான காரணம் நுரையீரல் பகுதியில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் படிவது மற்றும் தொண்டைகளின் வறட்சி ஆகியவை இருமல் வருவதற்கான காரணமாகும்.

தீராத சளி, இருமல் ஆகியவற்றை குணப்படுத்த வெங்காயம்,பூண்டு இதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

உடல் பகுதியில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற இவை உதவுகிறது. வெங்காயத்தில் உள்ள சல்பர் அதிக சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாட்டிக்காக செயல்படுகிறது. இவை உடலில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது.

வெங்காயம் மற்றும் பூண்டில் உள்ள மூலப்பொருட்கள் சளி, இருமலை குணப்படுத்துவதோடு சுவாசம் மண்டலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குணப்படுத்தும். தீராத சளி, இருமல் குணமடைய தேவையான செய்முறைகள்.

இரண்டு வெங்காயம் இரண்டு பூண்டு ஆகியவற்றை சிறியதாக நறுக்கி ஒரு கப் நீரில் இதனை நன்றாக வேக வைத்து அதன் பிறகு இதனை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகி வருவதன் காரணமாக நம் நுரையீரல் உள்ள பாக்டீரியாக்களை அளித்து சுவாசப் பாதையில் உள்ள பாக்டீரியாக்களை அளிக்கும்.

நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து சளி இருமல் ஆகியவற்றை முழுமையாக குணப்படுத்த உதவுகிறது.

Exit mobile version