Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என் தலைவர பத்தி அப்படி சொல்லாதீங்க! பாஜக பிரமுகர் நமீதா பேட்டி!!

#image_title

என் தலைவர பத்தி அப்படி சொல்லாதீங்க! பாஜக பிரமுகர் நமீதா பேட்டி!
பாஜக பிரமுகரும் நடிகையுமான நமீதா அவர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். மேலும் மைசூர் சிங்கம் அண்ணாமலை என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு நேற்று அதாவது மே 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் பாஜக கட்சி தோல்வி அடைந்ததை குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக பிரமுகர் நடிகை நமீதா அவர்கள் பேட்டியளித்துள்ளார்.
நடிகை நமீதா அவர்கள் அந்த பேட்டியில், “மைசூர் சிங்கம் அண்ணாமலை அவர்கள் பாஜகவிற்கு வந்த பிறகு பாஜக கட்சி வளர்ந்து வருகின்றது. எங்கு பார்த்தாலும் எங்கள் கட்சியை பற்றிதான் பேச்சு இருக்கின்றது” என்று கூறினார். அப்போது மைசூர் சிங்கம் அண்ணாமலை அவர்களால் கர்நாடக தேர்தலில் ஏன் சாதிக்க முடியவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாஜக பிரமுகர் நமீதா அவர்கள் “என் தலைவரப் பத்தி அப்படி சொல்லாதீங்க. அவருடைய முழுக் கவனமும் தமிழ்நாடு மீது உள்ளது” என்று கூறினார்.
Exit mobile version